by wp_shnn

பிப்.20 முதல் எந்த நேரத்​தி​லும் போக்கு​வரத்து தொழிலா​ளர்​களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என அண்ணா தொழிற்​சங்கம் அறிவித்​துள்ளது. சென்னை​யில் நேற்று அண்ணா தொழிற்​சங்​கத்​தின் தலைமை​யின் கீழ் செயல்​படும் கூட்​டமைப்பு சங்கங்​களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்​றது. இதில் தேமு​திக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 22 சங்கங்களை சேர்ந்த நிர்​வாகிகள் பங்கேற்​றனர்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் அண்ணா தொழிற்​சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமல​கண்ணன் கூறிய​தாவது: வரும் 5-ம் தேதி போக்கு​வரத்து செயலரை சந்தித்து வேலைநிறுத்த நோட்​டீஸை வழங்​க​விருக்​கிறோம். இதையடுத்து 20-ம் தேதி முதல் எந்த நேரத்​தி​லும் வேலைநிறுத்தம் நடைபெறும். தொமுசவை தவிர்த்து அனைத்து சங்கங்​களை​யும் ஒருங்​கிணைத்து போராட்​டத்தை முன்னெடுக்​க​ உள்​ளோம்.

அதிமுக ஆட்சி​யில் 3 ஆண்டு காலமாக இருந்த ஒப்பந்த காலத்தை 4 ஆண்டு​களாக்​கினர். தற்போது 6-ம் ஆண்டை கடந்​தும் ஊதிய பேச்சு​ வார்த்தை நடைபெற​வில்லை. ஓய்வூ​தி​யர்​களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்​பலன் வழங்​கப்​பட​வில்லை. இது கண்டிக்​கத்​தக்​கது.

அங்கீகார தேர்தல் நடத்தி, 51 சதவீதம் வாக்கு பெறும் சங்கத்தை பேச்சு​வார்த்​தைக்கு அழைக்க வேண்​டும் என உயர்​நீ​தி​மன்​றத்​தில் ஆளுங்​கட்​சித்தொழிற்​சங்கம் உத்தரவு பெற்றிருக்​கின்​றது. இந்த விவகாரத்​தில் உச்சநீ​தி​மன்​றத்​தில் அண்ணா தொழிற்​சங்கம் தொடர்ந்த வழக்கு நிலுவை​யில் இருக்​கிறது.

அனைத்து சங்கங்​களை​யும் இணைத்து பேச்சு​வார்த்தை நடத்​தப்பட வேண்​டும். அதன் பிறகு அங்கீகார தேர்தல் நடத்​தட்டும். ஊதிய உயர்வு வழங்​குவதை தவிர்க்க அங்கீகார தேர்தல் போன்ற நடவடிக்கையை கையில் எடுத்​துள்ளனர்.

சிஐடியு மனவருத்தம்: தொமுச செய்​யும் தவறுகளால் அவர்​களுடன் இருந்த சிஐடியு உள்ளிட்ட சங்கங்​களால் தொழிலா​ளர்களை சந்திக்க முடிய​வில்லை. மனவருத்​தத்​தில் இருக்​கின்​றனர். அண்ணா தொழிற்​சங்கம் போராட்​டத்தை முன்னெடுக்​கும் நிலை​யில், எங்களுக்கு ஆதரவு கொடுக்க அனைத்து சங்கங்​களும் தயாராக இருக்​கின்​றனர். இவ்​வாறு ஆர்.கமல​கண்ணன் தெரி​வித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்