மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது

 மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஒரு தீர்வைக் காண்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைத் நியமிப்பதற்கான பிரேரணை…

Read more

ஜனாதிபதி அநுர குமார முதன்முறையாக ஹெலிகப்டர் மூலம் கண்டிக்குச் சென்றுள்ளார் என தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் அவராகவே கைதட்டி மகிழ்ந்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முதன்முறையாக ஹெலிகப்டர் மூலம் கண்டிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று நாடாளுமன்றத்தில் தானாகவே கைதட்டி மகிழ்ந்தார்.நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது உரையாற்றிய சாமர சம்பத், எதிர்க்கட்சியில் இருந்தபோது உத்தியோகபூர்வ பயணங்களுக்கு ஹெலிகப்டர்களைப்…

Read more

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் பகுதி பள்ளிவாயலில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில்  31 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் இன்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த பள்ளிவாசலில் இன்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு வந்த நபர் ஒருவர் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைய முயன்றுள்ளார்.அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட…

Read more
Image 1Fbbca0D73

மடு-பாலம்பிட்டியில் உயிருக்கு போராடும் யானை

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறது.
சுமார் 10 வயது மதிக்கத்தக்க தாக கூறப் படுகின்ற குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு யானை கூட்டம் ஒன்று வியாழக்கிழமை(5) இரவு வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் பொலிஸ் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த யானையை அப் பகுதியூடாக செல்லும் மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more
Image 8592Ec8Cea

வாள்களுடன் நடமாடிய இருவர் கைது

வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாரி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் ஊர்காவற்றுறை பொலிஸார் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read more
Whatsapp Image 2026 02 06 At 3.47.00 Pm

இலங்கையில் பெண் சாரதிகள் முதல் முறையாக நியமனம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெண் சாரதிகளுக்கு அரசாங்கம் நியமனம் வழங்கியுள்ளது.
பெண் சாரதிகளை நியமிப்பது என்பது வெறும் வாய்வார்த்தைகளாக கூறப்பட்டுவந்த நிலையில் முதல் முறையாக பெண் சாரதிகளுக்கு அரசாங்கம் நியமனங்களை வழங்கியுள்ளது.
சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதன் மூலம், சிறந்த நாடு, சிறந்த சமூகம் மற்றும் பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்க முடியும் என்ற அரசாங்கத்தின் கருபொருக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக பெண் சாரதிகள் பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பேசப்பட்டு வந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ்தான் இந்த விடயம் சாத்தியமாக்கப்பட்டு வருகிறது.
ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளை உருவாக்கி கொடுத்தமைக்காக நியமனங்களை பெற்றுக்கொண்ட பெண் சாரதிகள் துறைசார் அமைச்சரான பிமல் ரத்நாயக்கவுக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Read more
Image B0Be2546B0

புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு: வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பெப்ரவரி 16-ந் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி 2013-ல் வைகோ தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ நேரில் ஆஜராகி, இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தார்.
வௌ்ளிக்கிழமை (06) அன்று இடம்பெற்ற விசாரணையின் போது மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு ​பெப்ரவரி 16-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வௌ்ளிக்கிழமை (06) அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை குறித்து வைகோ கூறுகையில், “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பதுதான் மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு. இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் ..

Read more