2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும், பல்வேறு முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் அவர் அறிவித்தார்.
அதன்படி, (இந்திய மதிப்பின் படி)
பாதுகாப்பு – ரூ. 4.91 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி
சுகாதாரம்- ரூ. 98.311 கோடி.
சமூக நலன்- ரூ. 60052 கோடி.
உள்துறை – ரூ.2.3 லட்சம் கோடி.
தகவல் தொடர்பு- ரூ. 95298 கோடி.
கல்வி- ரூ.1.28 லட்சம் கோடி.
வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி.
நகர்ப்புற வளர்ச்சி- ரூ. 96777 கோடி.
வணிகம், தொழிற்துறை- ரூ. 65553 கோடி.
அறிவியல்- ரூ. 55679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.