கொழும்பு விடுதியில் மர்மம் : இரண்டாவது வெளிநாட்டுப் பெண்ணும் மரணம் கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு பிரஜைகளில் ஒருவரான 27 வயதுடைய ஜெர்மன் நாட்டுப் பெண் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதே விடுதியில் தங்கிருந்த 24 வயதுடைய பிரிட்டிஷ் பெண் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்தார். இந்நிலையில், வைத்தியவாலையில், அனுமதிக்கப்பட்ட ஜெர்மன் பெண் இன்று உயிரிழந்துள்ளார்.
நச்சு வாயுவை சுவாசித்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடுதியில் தங்கியிருந்த 3 வெளிநாட்டுப் பெண்கள் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்யைதினம் ஒருவரும் இன்றையதினம் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.