Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான லூசியாவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு மாவட்டங்களில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்களில் ட்டத்தட்ட 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று கார்கிவ் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் டெலிகிராமில் எழுதினார். தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டிடங்கள், பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள் என்பன…
யேர்மனியின் ஸ்ருட்கார்ட் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் மகிழுந்து ஒன்று மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் படுகாயமடைந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதா அல்லது தாக்குதலா என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர்…
இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மால்டாவிற்கு வெளியே உள்ள சர்வதேச கடற்பரப்பில் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக, இந்தப் பணியை ஏற்பாடு செய்த குழுவான ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி (FFC) தெரிவித்துள்ளது. மால்டாவிலிருந்து 14 கடல் மைல் (25 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்தக் கப்பல், காசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது…
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு இடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சிரிய அதிகாரிகள் ட்ரூஸ் சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறினால் தலையிடுவோம் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்தன. டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில்…
எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும்…
வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 4 குழந்தைகளும் அங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஓட்டுநரிடம் விசாரணைகள் நடத்தியபோது அவர் ஸ்டெயரிங் வீலில் நித்திரைகொண்டுவிட்டார்…
ஜூன் 1, 2025 முதல் திருநங்கை பெண்கள் பெண்கள் கால்பந்தில் விளையாட தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து கால்பந்து நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்தில் திருநங்கைகள் இனி விளையாட முடியாது, மேலும் இந்தக் கொள்கை ஜூன் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும் என்று கால்பந்து சங்கம் (FA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன்…
நியூசிலாந்தில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, அந்நாட்டில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகரான வெலிங்டனிலும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் வெலிங்டனைத் தாக்கிய மிக மோசமான காற்று இதுவாகும். மேலும் சில பகுதிகளுக்கு ஏற்கனவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 24 மணி…
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைப்பு தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரையில்…
உக்ரைனும் அமெரிக்காவும் ஒரு பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இது வாஷிங்டனுக்கு மதிப்புமிக்க அரிய கனிமங்களை அணுக உதவும். பல வாரங்களாக நடந்த பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்கள் உக்ரைனின் பாதுகாப்பிற்கு வழங்கிய குறிப்பிடத்தக்க நிதி மற்றும் பொருள்…