இன்று ஞாயிற்றுக்கிழமை ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறைப் பார்வையிடவும் அஞ்சலி செலுத்தவும் மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
மறைந்த போப்பின் விருப்பத்திற்கு இணங்க, ஒரு எளிய நிலத்தடி கல்லறையில் அவரது உடலும் தேவாலயத்தில் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. வத்திக்கான் நேரப்படி காலை 7 மணிக்கு விசுவாசிகளுக்கு அவரின் கல்லறை திறந்தது.
அவரது முன்னோடிகளில் பலர் வத்திக்கான் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், பிரான்சிஸ் பசிலிக்காவை மதித்ததால் அதைத் தேர்ந்தெடுத்தார், வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னும் பின்னும் அல்லது மருத்துவமனை தங்குவதற்குப் பின்னரும் அவர் இந்த தேவாவயத்திற்கு அடிக்கடி வந்து சென்றார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வத்திக்கானின் மைதானத்திற்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஆனார்,