Home யாழ்ப்பாணம் யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு

யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு

by ilankai

யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். 

வலி. வடக்கு வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22)  எனும் யுவதியே உயிரிழந்துள்ளார். 

கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மூளைக்காய்ச்சல் காரணமாகவே இறப்பு ஏற்பட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles