Home யாழ்ப்பாணம் யாழில். தனியார் தங்குமிடத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்

யாழில். தனியார் தங்குமிடத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்

by ilankai

யாழ்ப்பாணத்தில் தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 20 மற்றும் 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

Related Articles