யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வைத்தியரால் முறைப்படு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வைத்தியசாலை பணியாளர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து , விசாரணைகளின் பின்னர் , யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் , சந்தேகநபரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
அதேவேளை , யாழ் . போதனா வைத்திசாலையில் தொலைபேசிகள் , பணம் என்பவை களவு போகும் சந்தர்ப்பங்கள் காணப்படும் நிலையில், வைத்தியசாலைக்கு வருவோர் பெறுமதியான உடமைகளை தம்முடன் எடுத்து வர வேண்டாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.