போரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை அன்சாக் தினத்தைக் கொண்டாடினர்.
அன்சாக் என்பது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளைக் குறிக்கிறது.
முதலில், 1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் உள்ள கல்லிபோலி தீபகற்பத்தைக் கைப்பற்ற இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்ச்சியைக் குறிக்க அன்சாக் தினம் பயன்படுத்தப்பட்டது . இதில் சுமார் 130,000 பேர் உயிரிழந்தனர்.
சமீப காலங்களில், போர் அல்லது மோதலின் போது பணியாற்றிய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த அனைத்து படைகளையும் மதிப்பளிக்கும் வகையில் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.
சிட்னியில், இராணுவ வீரர்களின் வருடாந்திர அணிவகுப்புக்கு முன்னதாக, சுமார் 7,500 பேர் காலையில் அஞ்சலியில் கலந்து கொண்டதாக பொது ஒளிபரப்பாளரான ஏபிசி தெரிவித்துள்ளது.
கான்பெர்ரா, மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டு மற்றும் ஹோபார்ட் ஆகிய நகரங்களும் அஞ்சலிகள் நடத்தின.
நியூசிலாந்தில், வெலிங்டனில் ஒரு பெரிய நிழக்வு நடைபெற்றது.