Home கொழும்பு ரணில் வருவார்:ராஜித ஆருடம்?

ரணில் வருவார்:ராஜித ஆருடம்?

by ilankai

இலங்கை பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தினை எட்டாது தொடர்ந்தும் அபாய எல்லையினுள் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும் அவர் சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பது மக்களுக்குத் தெரியும்.

கோத்தபாய இரவில் குழியில் விழுந்தார். பகலில் அனுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில் யாரும் இல்லை.

அப்படியானால் மக்கள் முன் உள்ள ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவே. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கதான்.

ரணில் விக்ரமசிங்கவின் முகத்தைப் பார்க்காதீர்கள். அவரது தலைக்குள் இருக்கும் மூளையைப் பாருங்கள். அந்த மூளையால்தான் இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப முடியும் என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related Articles