Home கொழும்பு பிள்ளையானிற்கு விடுதலை இல்லையா?

பிள்ளையானிற்கு விடுதலை இல்லையா?

by ilankai

பிள்ளையானுக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

இலங்கை அரசின் அமைச்சரவை பேச்சாளர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அவை குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. 

பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவை.அதன்பிரகாரம் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஏப்ரல் 21 தாக்குதல் மட்டுமின்றி பரவலாக பிள்ளையானால் முன்னெடுக்கப்பட்ட பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

சிறையிலிருந்த பிள்ளையான் அதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது. கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன. 

எனவே, பிள்ளையான் அதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related Articles