Home கொழும்பு முன்னாள்களிற்கு துன்பம்?

முன்னாள்களிற்கு துன்பம்?

by ilankai

முன்னாள் ஜனாதிபதிகளை இலக்கு வைத்து விசாரணைகள் தற்போதைய அரசில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக   7 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலமளிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 25 ஆம் திகதி காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு முன் அழைக்கப்பட்டார், ஆனால் அவர் தான் அப்போது சமூகமளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.இதனால், வாக்குமூலம் பதிவு செய்ய ஆணைக்குழு மாற்று நாளை அறிவித்திருந்தது.

Related Articles