யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் துருப்பிடித்த நிலையில் ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குருநகர் ஐந்துமாடி கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படகுத்துறையில் பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த படகொன்றினை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் அப்புறப்படுத்த முனைந்த போது படகின் அடியில் துப்பாக்கி காணப்பட்டுள்ளது
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழு துப்பாக்கியை மீட்டதுடன் , துப்பாக்கியுடன் ஒரு தொகை தோட்டாக்களையும் மீட்டுள்ளனர்.
மீட்ட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் .தோட்டாக்கள் நீண்ட காலமாக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமையால் துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது.
துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.