புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு பின்பாகவுள்ள காட்டு பகுதியில் மரக் குற்றிகள் கடத்தல் முயற்சி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
உடையார்கட்டு காட்டுப்பகுதியில் புதன்கிழமை (09) இரவு மரத்தடிகள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத்திற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, 1700 ற்கு மேற்பட்ட காயா மரக் குற்றிகள் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் மரக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.