9
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது, பொலிசாரின் உத்தரவை மீறி , டிப்பர் வாகனத்தை சாரதி மிக வேகமாக துரத்தி சென்றுள்ளார்.
வாகனம் நல்லூர் பின் வீதி வழியூடாக சென்று வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீடொன்றின் மதிலை உடைத்து , வீதியில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு உள்ளான வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.