Home இந்தியா மோடிக்கு பரிசு:11 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!

மோடிக்கு பரிசு:11 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!

by ilankai

இந்திய பிரதமர் மோடியை மகிழ்விக் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை புறந்தள்ளி இந்திய மீனவர்கள் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தியதன் பின்னர், சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.

முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி,  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை கொழும்பில் சந்தித்துப் பேசினார். இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் மீனவர் பிரச்சினை முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை குறித்து விவாதித்தோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான அணுமுறையைப் பின்பற்றுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்திருந்தார்.

Related Articles