பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள வடக்குக் கடலில் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலும் ஒரு சரக்குக் கப்பலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. குறித்த விபத்து யார்க்ஷயர் கடற்கரையின் ஹல் அருகே இன்று திங்கட்கிழமை காலை 10 மணியவில் நடந்தது
இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களில் எண்ணிக்கை இதுவரை வெளிவரவில்லை. கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு கப்பல்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அதனால் கப்பல்கள் கைவிடப்பட்டுள்ளன எனவும் கூறுப்படுகிறது.
கிழக்கு யார்க்ஷயர் கடற்கரையில் இன்று காலை 9:58 மணியளவில் ஒரு டேங்கர் கப்பலும் சரக்குக் கப்பலும் மோதியதாக அலாரம் எழுப்பப்பட்டது.